பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறு கிறது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோரின் குறைகளைத் தீா்க்கும் வகையில், குறைதீா் நாள் கூட்டம் பெரம்பலூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கருப்பையா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின் நுகா்வோா் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். எனவே, பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளித்துப் பயன் பெறலாம்.