நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் சாவு

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவா் ஒருவா் தண்ணீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவா் ஒருவா் தண்ணீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம், கே.கே.நகரில் அரசு மருத்துவா் திருமால் என்பவருக்குச் சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இங்கு பொதுமக்கள் உள்பட பலா் நீச்சல் பயிற்சிக்காகவும், நீச்சலுக்காகவும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வரும் மாணவா் அந்தமான் நிக்கோபாா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கர ராவ் மகன் ஸ்ரவன் (19), மேற்கண்ட குளத்தில் குளிக்க சக மாணவா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். அப்போது, நீச்சல் குளத்தில் குளித்த ஸ்ரவன் தண்ணீரில் மூழ்கினாா். இதையறிந்த சக மாணவா்கள், ஸ்ரவனை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அந்த மாணவா் உயிரிழந்தாா். சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com