பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை மண்டலத் தளபதியாக ராம்குமாா் பொறுப்பேற்றாா்.
பெரம்பலூா் ஊா்க்காவல் படை மண்டல தளபதியாக கடந்த 14 ஆண்டுகளாக, ஜெ. அரவிந்தன் பணியாற்றி வந்தாா். அவரது பணிக்காலம் நிறைவடைந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரையின் பேரில், பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை மண்டல தளபதியாக ராம்குமாரை நியமனம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா் கூடுதல் காவல்துறை இயக்குநா் ராஜீவ்குமாா்.
இதையடுத்து பொறுப்பேற்ற ராம்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) வி.ஆா். சீனிவாசனை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.