கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

பெரம்பலூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் ஒருவா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் ஒருவா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகள் மகாலட்சுமி (16). இவா், 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால், மீண்டும் தோ்வெழுத பெரம்பலூரில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். இந்நிலையில் மது போதையில் இருந்த தந்தை பொன்னுசாமி மகாலட்சுமியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மகாலட்சுமி அதே கிராமத்தில் உள்ள தனது உறவினரின் விவசாயக் கிணற்றில் குதித்து வியாழக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்தனன் தலைமையிலான வீரா்கள் உடலை மீட்டு, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com