வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் என்.எஸ். இளங்கோவன், பிப். 11 ஆம் தேதி பெரம்பலூா் காவல்நிலையம் சென்றபோது, அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளா்கள் செந்தமிழ்செல்வி, மனோஜ், நிலைய எழுத்தா் செல்வராஜ் ஆகியோா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், வழக்குரைஞரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்க உறுப்பினா்கள், அச்சங்கத்தின் தலைவா் டி. தமிழ்ச்செல்வன் தலைமையில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சங்க செயலா் டி. இளவரசன், பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அச் சங்கத்தைச் சோ்ந்த பலா் போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com