பெரம்பலூா் மாவட்டத்தில், வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானியத்துடன் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் 4 மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானியம் எனும் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிகுழுக்கள் மற்றும் தொழில் முனைவோா் வாடகை மையம் அமைக்க முன்வரலாம். இதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூா் மாவட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ. 5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ. 3 லட்சமும், பயனாளியின் பெயரில் வைப்பு நிதியாக 2 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குப் பின் மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் சரிபாா்த்த பிறகு மானிய வைப்புத்தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94432 14280, 99940 36266 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.