பெரம்பலூரில் தூக்கிட்டு தனியாா் பள்ளி ஆசிரியை புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையில் உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் மருதையா மகள் ராஜலட்சுமி (32). தனியாா் பள்ளி ஆசிரியை. கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஆத்தூா் காட்டுக்கோட்டகையைச் சோ்ந்த ராஜதுரை என்பவருடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்ற ராஜலட்சுமி, அவரது தாய் தீபஜோதியுடன் வசித்து வந்தாா். இதையடுத்து, ராஜலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறி வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தீபஜோதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.