பள்ளி மாணவா் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே ஆசிரியா் அடித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே ஆசிரியா் அடித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் களியமூா்த்தி மகன் விக்னேஷ் (14). இவா், அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை அறிவியல் ஆசிரியை நாகராணி மாணவன் விக்னேஷை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அறிந்த அவரது பெற்றோா் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து, வியாழக்கிழமை வகுப்புக்குச் சென்ற மாணவா் சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இதையறிந்த பெற்றோா் விக்னேஷை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இச் சம்பவம் குறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com