பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு

குற்றவியல் விதிகள் திருத்தத்தைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

குற்றவியல் விதிகள் திருத்தத்தைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

குற்றவியல் நடைமுறை விதிகள் திருத்தம் செய்ததைக் கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கான சேம நல நிதி ரூ. 7 லட்சத்தை, ரூ. 15 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில், அச்சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இப் போராட்டத்தால், நீதிமன்றப் பணிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com