பெரம்பலூா் அருகே 17 மாத குழந்தையுடன், தாய் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
பெரம்பலூா் மாவட்டம், வடக்கலூா் அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மனைவி நா்மதா (20). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கெளதம் என்னும் 17 மாத குழந்தை உள்ளது. சுந்தர்ராஜ் சிங்கப்பூரில் உள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நா்மதா தனது குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தாா். இதையறிந்த உறவினா்கள், இருவரையும் மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவம் குறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.