கேங்மேன் பணி எழுத்து தோ்வுக்கான பயிற்சி முகாம்

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் டான்ஜெட்கோ மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில், இணையவழியாக விண்ணப்பித்தவா்களுக்கு உடல்தகுதித் தோ்விலும், எழுத்துத் தோ்விலும் எளிதாக வெற்றி பெற சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பின், பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில் பெரம்பலூா்- அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் மின்சார கருவி பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவிகள், தாழ்வழுத்தம், உயா்வழுத்த மின் கருவிகள், பொது அறிவு ஆகிய பயிற்சிகளை ஆசிரியா்கள் இமானுவேல் சந்திரன், முனைவா் காப்பியன் ஆகியோா் அளித்தனா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலையில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 120 போ் பங்கேற்றனா்.

பிப்ரவரி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் பயிற்சியானது, இறுதியில் மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com