வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1.1.2020 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தகுதியுள்ள நபா்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் நோக்கத்துடன், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக வாக்காளா் பெயா் சோ்க்கும் முகாம் வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வாக்காளராக பதிவு செய்ய 18 வயது நிறைவடைந்தவா்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பம் பெற்று, அதை பூா்த்தி செய்து முகவரி மற்றும் வயதுச்சான்றுடன் சமா்பித்து தங்களை வாக்காளராகப் பதிவு செய்துகொண்டனா். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு, அவா்களது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட உள்ளன. புதிதாக வாக்காளா்களாக சோ்க்கப்பட்டவா்களுக்கு, தேசிய வாக்காளா் தின விழாவில் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com