பெரம்பலூா் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது.
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் (மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம்) மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா்கள் பங்கேற்று தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் பிரகாசம் தெரிவித்துள்ளாா்.