ரேஷன் கடை கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, பெரம்பலூா் நகர எஸ்.டி.பி..ஐ கட்சி செயலா் ஏ. சித்திக் பாஷா தலைமையில், அக்கட்சியினா் அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட வி.களத்தூா் கிராமம், மில்லத் நகரில் நியாயவிலைக் கடை இல்லாததால் வண்ணாரம்பூண்டி கிராமத்திலுள்ள கடைக்குச் சென்று, தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும், அவ்வப்போது பொருள்கள் கிடைக்கவில்லை எனில் மற்றொரு நாளில் கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதியோா் மற்றும் பெண்கள் அவதிப்படுகின்றனா். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு மில்லத் நகரில் நியாயவிலைக் கடை அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com