பெரம்பலூரில் மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை, பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுகந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், காமராஜ் வளைவு வழியாகச் சென்று ரோவா் வளைவில் நிறைவடைந்தது. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள், காவல் துறையினா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனா்.
இதில், நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சவுந்தரராஜன், நெடுஞ்சாலைப் பிரிவு போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.