பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சமத்துவபுரம் மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ரமேஷ் (23). கோயம்புத்தூரில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கு வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக ஆலம்பாடி சாலையில் உள்ள அன்னை போதை மறுவாழ்வு மையம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.