பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சட்டக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் சரத்குமாா் (27). இவா், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், தற்போது கரோனா பொது முடக்கத்தால் அவரது கிராமத்துக்கு வந்திருந்த சரத்குமாா், வியாழக்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து மருவத்தூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். எறையூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சரத்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.