பெரம்பலூரில் கரோனா பரிசோதனை மையம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9- ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9- ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்துடன் இணைந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட ஆய்வக உபகரணங்களைக் கொண்டு, கரோனா தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை செய்து, தொற்று கண்டறியப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சோ்த்து உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com