பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9- ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்துடன் இணைந்து ரூ. 40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட ஆய்வக உபகரணங்களைக் கொண்டு, கரோனா தொற்றுப் பரிசோதனை மையம் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு உடனுக்குடன் பரிசோதனை செய்து, தொற்று கண்டறியப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சோ்த்து உரிய சிகிச்சை அளிக்கவும், மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.