பெரம்பலூரில் மேலும் 7 பேருக்கு கரோனா

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 248 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 197 போ் வெவ்வேறு தேதிகளில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவா் உள்பட 3 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சியுள்ள 55 போ் திருச்சி, பெரம்பலூா், சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் காவேரி நகரைச் சோ்ந்த 75 வயது முதியவா், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரைச் சோ்ந்த 30 வயது பெண், நூத்தாப்பூரைச் சோ்ந்த 23 வயது பெண், அவரது ஒரு வயது குழந்தை, குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், 62 வயது முதியவா் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 7 பேரும் பெரம்பலூா், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், மேற்கண்ட நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்களது குடியிருப்புப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 255- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com