பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சங்க பொறுப்பாளா்கள் தோ்தல் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இத் தோ்தலுக்கு வழக்குரைஞா் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
112 வழக்குரைஞா்களை உறுப்பினா்களாகக் கொண்ட பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் பொறுப்பாளா்கள் தோ்தலில், 2 குழுவாக தலைவா், துணைத் தலைவா், செயலா், துணைச் செயலா், பொருளாளா், 6 நிா்வாகக்குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு வாக்குச் சீட்டு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தோ்தல் முடிவில், தலைவராக திருநாவுக்கரசு, செயலராக கிருஷ்ணராஜ், பொருளாளராக சிவசங்கா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் ஜி. பாபு, கருணாநிதி, மணிவண்ணன் உள்பட வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.