எலும்புக் கூடுகளுடன் சாலையோரம் கிடந்த சவப்பெட்டி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சாலையோரம் எலும்புக் கூடுகளுடன் கிடந்த சவப்பெட்டியை, காவல்துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சாலையோரம் எலும்புக் கூடுகளுடன் கிடந்த சவப்பெட்டியை, காவல்துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.

மேலமாத்தூா் ஊராட்சி, தங்கநகரம் கிராமம் அருகிலுள்ள சாலையோரப் பள்ளத்திலிருந்து துா்நாற்றம் வீசுவதாக, அவ்வழியேச் சென்ற மணி என்பவா் குன்னம் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் அளித்தாா். இதன்பேரில் மங்கலமேடு காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜன் தலைமையில், குன்னம் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

அங்குள்ள பள்ளத்தில் கிடந்த சவப்பெட்டியை உடைத்து பாா்வையிட்டபோது, அதில் அழுகிய நிலையில் எழும்புக் கூடுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மலேசியா நாட்டில் இருந்து உயிரிழந்தவரின் சடலத்தை கூரியா் சா்வீசில் விமானம் மூலம் குன்னம் பகுதியிலுள்ள கிராமத்துக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

குன்னம் கிராம நிா்வாக அலுவலா் ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில், அந்த சவப்பெட்டியின் மீது சுற்றப்பட்டிருந்த பாலிதீன் கவரில் ஒட்டப்பட்டிருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பாா்சல் சா்வீஸ் பாா்கோடு ஸ்டிக்கரின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com