அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் அருகே கீழக்கனவாய் கிராமத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் பயிற்சியுடன் கூடிய முதலாமாண்டு பட்டப்

பெரம்பலூா் அருகே கீழக்கனவாய் கிராமத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் பயிற்சியுடன் கூடிய முதலாமாண்டு பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020- 2021 ஆம் கல்வியாண்டுக்கு அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழுநேர தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு  இணையதளம் மூலம் ஆக. 4 வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான முதலாமாண்டு பட்டயச் சோ்க்கை அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு முலம் சோ்க்கை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 04328 - 243200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com