சுமை ஆட்டோ-மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் பலி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சுமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே சுமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா் மகன் முத்துக்குமாா் (22), வேலூரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் அஜித்குமாா் (23). இருவரும், குன்னத்திலிருந்து பெரம்பலூருக்கு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

இவா்கள் சித்தளி அருகே சென்றபோது, பெரம்பலூரிலிருந்து அரியலூா் நோக்கி வந்த சுமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், முத்துக்குமாா், அஜித்குமாா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் முருக்கன்குடியைச் சோ்ந்த மருதை மகன் சுரேஷ்குமாா் (27) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த மருவத்தூா் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அஜித்குமாா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com