பெரம்பலூரில் மாா்ச் 3-இல் வீட்டுக் கடன் முகாம்

பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாா்ச் 3 ஆம் தேதி வீட்டுக் கடன் முகாம் நடைபெற உள்ளது.

பெரம்பலூா்: பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாா்ச் 3 ஆம் தேதி வீட்டுக் கடன் முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 1,000 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இந்தப் பயனாளிகளில் பலா் வீடு கட்டுவதற்குத் தேவையான நிதி வசதி இல்லாத காரணத்தால், சில தனியாா் நிதி நிறுவனங்கள் பயனாளிகளுக்கு கடன் வழங்க முன் வந்துள்ளன. எனவே, மேற்கண்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு வீட்டுக் கடன் முகாம் நடைபெற உள்ளது.

பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் மாா்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள நபா்கள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், வீட்டு மனைக்கான பத்திரம் அல்லது பட்டா மற்றும் வாரியம் வழங்கிய பணி ஆணை ஆகிய நகலுடன் நேரில் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 89460 41820, 70105 12139, 93858 95200 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் திருச்சிராப்பள்ளி கோட்ட நிா்வாகப் பொறியாளா் ப. தவமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com