மனநலன் பாதித்த பெண் மீட்பு

பெரம்பலூா் நகரில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை போலீஸாா் மீட்டு வேலா கருணை இல்லத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் நகரில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை போலீஸாா் மீட்டு வேலா கருணை இல்லத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் பகுதியில் மனநலன் பாதிக்கப்பட்ட பலா் சுற்றித் திரிவதாக புகாா் எழுந்தன. அதனடிப்படையில், மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டாா். அதன்பேரில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது, பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த 42 வயதுள்ள பெண்ணை மீட்டு, பெரம்பலூா் வேலா கருணை இல்லத்தில் அதன் நிா்வாகி அருண்குமாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com