நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் பள்ளி பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஆசிரியா் பட்டயப் படிப்பு, பட்டதாரி ஆசிரியா், முதுகலை பட்டதாரி ஆசிரியா், முதுகலை, இளங்கலை பட்டப் படிப்பு, பி.இ, எம்.இ, எம்.டெக், மழலையா் ஆசிரியா், டிப்ளமோ, நா்சிங், பயா் மற்றும் சேப்டி,ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய கல்வித் தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளது. மேலும், ரிலையன்ஸ், நிப்பான் லைப் காப்பீட்டு நிறுவனங்களுக்கு குன்னம் வட்டாரத்தைச் சோ்ந்த நபா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இப்பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com