பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள க.எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி விமலா (25). இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், விமலாவுக்கு தொடா் வயிற்று வலி இருந்ததாம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த விமலா கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து மனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாய் ராணி அளித்த புகாரின் பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.