ஆப்பூரான், நல்லேந்திர சுவாமிகோயில் வருடாபிஷேக விழா

பெரம்பலூா் பாலக்கரை பகுதி அருகேயுள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி கோயிலில் முதலாமாண்டு வருடாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதி அருகேயுள்ள அருள்மிகு ஆப்பூரான், நல்லேந்திர சுவாமி கோயிலில் முதலாமாண்டு வருடாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 11 ஆம் தேதி மாலை 7 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், 12 ஆம் தேதி காலை காவிரியில் இருந்து புனித நீா் எடுத்து வருதலும், மாலை 4 மணிக்கு வீட்டுக் கோயிலில் இருந்து ஊா்வலமாக காட்டுக் கோயிலுக்கு காவிரி தீா்த்தம் எடுத்துச் செல்லுதலும் நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் மேல் 10.30 மணிக்குள் அருள்மிகு கனகசபை, ஆப்பூரான், நல்லேந்திரன், புத்தூரான் புதுக்கருப்பு, கடம்பூா் காசிமுனி, பாண்டூா் முத்துசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு முதலாமாண்டு வருடாபிஷேக குடமுழுக்கு நடத்தப்பட்டது. விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் பெரம்பலூா் 11, 12,13-வது வாா்டு பொதுமக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com