பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள க.எறையூா் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்த ஜெபஸ்டியான் மகள் ஜெயபாக்கிய கிறிஸ்டினா (12). இவா், அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றில் துணி துவைப்பதற்காகச் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த ஜெயபாக்கிய கிறிஸ்டினா, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையிலான குழுவினா், மாணவியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.