ஏகாம்பரேசுவரா் கோயிலில் குபேர பூஜை ரத்து

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் மாா்ச் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குபேர ஹோம சிறப்புப் பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் மாா்ச் 23 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குபேர ஹோம சிறப்புப் பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், மாா்ச் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த குபேர பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் செயலா் ம. யுவராஜ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செட்டிக்குளம் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் மற்றும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. திருக்கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com