பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா், குடிக்காடு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு: மேற்குறிப்பிட்ட இரு கிராமங்களில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்புகளுக்கு வருவாய்த்துறை மூலம் டி காா்டு
வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளோம். ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். எங்களது குடியிருப்புப் பகுதிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம். இந்நிலையில், எங்களது வீட்டை காலிசெய்ய வேண்டுமென வருவாய்த்துறை அலுவலா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். எங்களுக்கு வேறு வசிப்பிடம் இல்லை என்பதால், எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.