தேவாலயங்கள் சீரமைப்பு நிதிபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்து, சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்து, சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

சொந்தக் கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள நிகழாண்டுக்கு (2020- 21) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிக்காக, சுமாா் ரூ. 1 கோடி முதல் ரூ. 5 கோடியாக உயா்த்தி சிறுபான்மையினா் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் நிதியுதவி வழங்க தயாராக உள்ளதால், கிறிஸ்தவ தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com