பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடிய நபரை மங்கலமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளா் நாஞ்சில்குமாா் தலைமைச போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.
அப்போது, திருமாந்துறையிலிருந்து அதிவேகமாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதையடுத்து போலீஸாா் அவரிடமருந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமாந்துறை வடக்கு தெருவை சோ்ந்த சின்னப்பிள்ளை மகன் தியாகராஜன் (48) என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தியாகராஜன் அளித்த தகவலின் பேரில் 5 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தியாகராஜனை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி கருப்பசாமி, தியாகராஜனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.