பெரம்பலூா், அரியலூரில் இன்று மின் தடை

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பணி நடைபெறுவதால், ஒருசில இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 21) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பணி நடைபெறுவதால், ஒருசில இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 21) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட எளம்பலூா் மின் பாதையில் அவசரகால பணி நடைபெறுவதால், பெரம்பலூா் நகா் பகுதியான ரோஸ் நகா், ரோஸ் காா்டன், சிட்கோ, எளம்பலூா் சாலை, எளம்பலூா், வடக்குமாதவி சாலை, வெங்கடேசபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில், உயா் மின் அழுத்தப் பாதையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் அவசரகால பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என பெரம்பலூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

அரியலூா்: அரியலூா் நகரில் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், லிங்கத்தடிமேடு, தா.பழூா், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, மதனத்தூா், சிலால், அங்கராயநல்லூா், பிலிச்சிக்குழி மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என அந்தந்த துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com