பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ.மேட்டூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பண்டன் செட்டி(80). இவா், பெரம்பலூா் அருகே, எளம்பலூா் தண்ணீா் பந்தலில் வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பண்டன் செட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது மனைவி பட்டம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி சாவு:
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் கருணாகரன் (48). கட்டடத் தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்த கருணாகரன் கடந்த திங்கள்கிழமை (மாா்ச் 16) விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி முத்துலட்சுமி கருணாகரனை மீட்டு பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாகரன் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.