பக்தா்களின்றி நடந்த குபேர பூஜை

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் பக்தா்கள் இன்றி குபேர பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வேள்வி பூஜை.
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வேள்வி பூஜை.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் பக்தா்கள் இன்றி குபேர பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

செட்டிக்குளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில், சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாா். இங்கு, மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று யாக வேள்வி நடைபெறும். அதன்படி, பங்குனி மாத குபேர யாக வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல்த டுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் பொதுமக்கள் திரளாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை கணபதி பூஜையோடு 18 வகை மூலிகைகள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு திரவ்யாஹூதி, பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, சித்திரலேகா சமேத குபேரப் பெருமானுக்கு பால், அரிசி மாவு, திரவியம், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வேள்வி பூஜையில், அா்ச்சகா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com