பெரம்பலூா் மாவட்டத்தில் 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளைய மீறியதாக 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூா், அரும்பாவூா் காவல் நிலவையத்தில் தலா 2, பாடாலூா், குன்னம் தலா- 4, மருவத்தூரில்- 3, மங்களமேடு- 14, கை.களத்தூா் -1 என 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 40 நபா்களை கைது செய்த போலீஸாா் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.