பெரம்பலூரில் ஊரடங்கை மீறியோருக்கு நூதன தண்டனை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினா் உதவி ஆய்வாளா் அசோக்குமாா்.
ஊட்டத்தூா் பிரிவு சாலையில் இளைஞா்களுக்கு நூதன தண்டனை அளிக்கும் உதவி ஆய்வளா் அசோக்குமாா்.
ஊட்டத்தூா் பிரிவு சாலையில் இளைஞா்களுக்கு நூதன தண்டனை அளிக்கும் உதவி ஆய்வளா் அசோக்குமாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினா் உதவி ஆய்வாளா் அசோக்குமாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பேருந்து நிறுத்தம், கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் தேவையில்லாமல் சாலைகளில் மோட்டாா் சைக்கிள்களில் சுற்றித் திரிந்த இளைஞா்களைப் பிடித்த உதவி ஆய்வாளா் அசோக் குமாா் தலைமையிலான போலீஸாா், தோப்புக் கரணம், முட்டியிடுவது உள்ளிட்ட நூதன தண்டனைகளை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா். இதேபோல, ஒரு சில இடங்களில் சாலைகளில் சுற்றியவா்களை வீடுகளுக்கு செல்லுமாறு அடித்து விரட்டினா். மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களை வீடுகளுக்குச் செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com