பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 நபா்களில், 4 போ் சிகிச்சை பெற்று அவரவா் வீடு திரும்பியுள்ளனா். 7 போ் திருச்சி, திருவள்ளூா் மாவட்ட அரசுத் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்தவா்களில் 20 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூரைச் சோ்ந்த 31 வயது இளைஞா், துங்கபுரத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், கோவில்பாளையத்தைச் சோ்ந்த 23 வயது இளைஞா் உள்பட 5 பேருக்கு கரோனா
நோய்த் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினரால் திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தொடா்ந்து 5 பேரும் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு சுகாதாரத்துறை அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இவா்களின் பெற்றோா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து, அவா்களை தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 36- ஆக உயா்ந்துள்ளது.