பாதிப்பு : 2,160
குணம் : 2,101
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,152 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,160 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,101 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 30 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.