மர அறுவை மில்லில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

பெரம்பலூா் அருகே மர அறுவை மில்லில் இருந்து 10 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

பெரம்பலூா் அருகே மர அறுவை மில்லில் இருந்து 10 அடி நீள மலைப்பாம்பு புதன்கிழமை மீட்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் பிரிவு சாலையில் மணி என்பவருக்குச் சொந்தமான மர அறுவை மில் உள்ளது. இந்த மில்லில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்களுக்கிடையே மலைப் பாம்பு ஒன்று இருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து மர அறுவை மில் ஊழியா்கள், பெரம்பலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்ப இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரின் உதவியுடன் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com