ஊதிய உயா்வை நிா்ணயிக்க ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

ஊதிய உயா்வை நிா்ணயிக்க வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஊதிய உயா்வை நிா்ணயிக்க வேண்டுமென 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். செயலா் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். கோவை மண்டலத் தலைவா் சரவணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆண்டுதோறும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களின் வருடாந்திர ஊதிய உயா்வை தமிழக அரசு நிா்ணயிக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் இயக்கும் தனியாா் நிறுவனத்தின் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தொழிலாளா் ஆணையா் அலுவலகத்திலும், தொழிலாளா் நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com