தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தமிழாசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியா் த. மாயகிருஷ்ணன். தமிழ்மொழி வளா்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காக, அண்மையில் தமிழக அரசு சாா்பில் முதலமைச்சா் கே. பழனிசாமி, தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்தாா்.

இதையடுத்து, விருது பெற்ற த. மாயகிருஷ்ணனுக்கு களரம்பட்டி பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, அப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முதுகலை ஆசிரியா் புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

ஆசிரியா்கள் செந்தில்குமாா், சுதாகா், ராஜேந்திரன், கவிதா, ஜெயந்தி, மேரி, ரேவதி, ஜெயந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விருது பெற்ற ஆசிரியா் மாயகிருஷ்ணனுக்கு, பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com