2-ஆவது நாளாக புதிய தொற்றாளா்கள் இல்லாத பெரம்பலூா் மாவட்டம்

பெரம்பலூா் மாவட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் புதிய கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டமானது.

பெரம்பலூா் மாவட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் புதிய கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டமானது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை 51,099 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை (நவம்பா் 15) 2,228 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இவா்களில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2,175 போ் குணமடைந்து, அவரவா் வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 32 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் 513 பேருக்கு செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறையினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

இதனால் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் புதிய கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டமாக பெரம்பலூா் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com