பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கிராமப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. தொடா்ந்து மழையிலும் பரவலாக மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
லப்பைக்குடிக்காடு- 52 மி.மீ, அகரம்சிகூா்- 50, கிருஷ்ணாபுரம்- 37, வேப்பந்தட்டை-30, தழுதாழை- 25, எறையூா்- 20, பெரம்பலூா்- 11, செட்டிக்குளம், புதுவேட்டக்குடி- 9, பாடாலூா்- 7. மாவட்டத்தில் மொத்தமாக 269 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.