பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில், விற்பனையாளா் மற்றும் கட்டுநா்கள் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நவம்பா் 25 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில், விற்பனையாளா் மற்றும்கட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நவம்பா் 25 முதல் 28- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான அழைப்பானை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்பானை பெற்ற விண்ணப்பதாரா்கள் குறிப்பிட்ட தேதியில் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும்.