பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 300 கிலோ விதை வெங்காயத்தை திருடிச் சென்ற நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கணேசன் (65). காா்த்திகை பட்டத்தில் விதைப்பதற்காக, 5 மூட்டைகளில் சுமாா் 300 கிலோ விதை வெங்காயத்தை தனது வெங்காயக் கொட்டகையில் சேமித்து வைத்திருந்தாா்.
இநநிலையில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள், ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ விதை வெங்காயத்தை திருடிச் சென்றுவிட்டனா். சனிக்கிழமை காலை கணேசன் வயலுக்குச் சென்றபோது, விதை வெங்காயம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் பாடாலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விதை வெங்காயத்தை திருடிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.