பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவுகளின் படி, யாருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்படவில்லை.
மாவட்டத்தில் இதுவரை 52,866 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை வரை 2,233 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 2,204 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 8 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து, மாவட்டத்தில் 449 பேருக்கு சனிக்கிழமை சுகாதாரத் துறையினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.