பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள குரும்பலூா், கிருஷ்ணாபுரம் கிராமங்களில் காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கேடயம் திட்ட விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நீதிராஜ் தலைமை வகித்தாா்.
ஆள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் காா்த்திகேயனி, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயசித்ரா, உதவி ஆய்வாளா் ஜான், தலைமைக் காவலா் சுகன்யா ஆகியோா், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும் கேடயம் திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல்துறையின் கேடயம் திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 குறித்தும் விளக்கி கூறினா்.